இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 


இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய செய்தி சேனலான WION க்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்துள்ளமை குறித்து கவலை தெரிவித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, “….இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் எதையும் நாடு அனுமதிக்காது” என்று குறிப்பிட்டார்.

WION நிருபர்: இந்த ஆண்டு தேர்தல் நடக்கிறது. நீங்கள் எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள் ?

ஜனாதிபதி ரணில்: நான் மீண்டும் வருவதற்கு நான் போட்டியிட வேண்டும். பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை முதல் கடமையாகக் கொண்டுள்ளேன் . திவால்நிலையிலிருந்து மீள்வதில் கவனம் செலுத்துவதே இலக்காகும். நான் மீண்டும் ஜனாதிபதவிக்காக போட்டியிட எதிர்பார்த்துள்ளேன்.

WION நிருபர்: நீங்கள் ஒரு நல்ல வேலையைச் செய்துவிட்டீர்கள் என்று நினைக்கிறீர்களா? அதாவது, இலங்கை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதன் அடிப்படையில் உங்கள் பதவிக்காலத்தில் பொருளாதாரம் பற்றிய உங்கள் பார்வை என்ன?

ஜனாதிபதி ரணில்: சரி, நான் மிகவும் திருப்தியடைகிறேன், எங்களால் இதைச் செய்ய முடியும் என்று நான் உணர்கிறேன்