சிரேஷ்ட பிரஜைகளுக்கான 15% வட்டி வீதத்தை மீண்டும் வழங்குங்கள் : சஜித் !



பல்வேறு அரசாங்கங்கள் சிரேஷ்ட பிரஜைகளினால் வங்கிகளில் வைப்புச் செய்யப்படும் நிலையான வைப்புகளுக்கு 15% வழங்கப்பட்டு வந்த விசேட வட்டி வீத முறைமை இன்று 8% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி வருமானத்தை சிரேஷ்ட பிரஜைகளுக்கு மீள ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (01) பாராளுமன்றத்தில் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

இலட்சக்கணக்கான சிரேஷ்ட பிரஜைகளின் கோரிக்கையாக இது அமைந்திருப்பதால், உரிய வட்டி விகிதத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.