450 சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிளைப் பதிவு செய்வதற்கு போக்குவரத்து திணைக்களம் தீர்மானம் !


450 சிசிக்கு மேற்பட்ட எஞ்சின் வலு கொண்ட பத்தாயிரம் மோட்டார் வண்டிகளை பதிவு செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் முடிவு செய்துள்ளது.

இதற்காக போக்குவரத்து அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இணைந்து அமைச்சரவை அறிக்கையை தயாரித்துள்ளதுடன், இந்த அறிக்கையானது சில வாரங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுங்க வரி செலுத்தாமல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பதிவு செய்யப்படாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.