மசாஜ் நிலையத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் 5 பெண்கள் கைது !


இராஜகிரியவிலுள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து பெண்கள் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் கட்டானைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் மேலும் மூவர் மோதரை, பொரளை, இராஜகிரிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர் .

இவர்கள் நீண்டகாலமாக மசாஜ் நிலையத்திற்கு வருபவர்களை இலக்கு வைத்து ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்து வந்தமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது .