பால் தேநீரின் விலையை குறைக்க கோரிக்கை !


இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கோப்பை பால் தேநீரை 80 ரூபாவிற்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்

அத்துடன், டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் காரணமாக நேற்று (25) முதல் அமுலுக்கு வரும் வகையில் பால்மா இறக்குமதியாளர்கள், பால்மாவின் சில்லறை விலையை குறைக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக பால்மாவின் விலை அதிகரித்தமையினால், பால் தேநீருக்கான கேள்வி குறைவாகக் காணப்பட்டது.

தற்போது அந்த நிலை மாறியுள்ளதுடன், மீண்டும் 80 ரூபாவிற்கு ஒரு கோப்பை பால் தேநீரை வழங்குமாறு அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.