வாகன இறக்குமதிக்கு முறையான வேலைத்திட்டம் வேண்டும் - வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் !


இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முறையான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே கருத்துத் தெரிவிக்கையில் ” வாகன இறக்குமதி தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்கு அரசாங்கத்தினால் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் எனவும் வாகனங்களை இறக்குமதி செய்யும் முன்பு மக்கள் விரும்பியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.