பின்னோக்கல் கற்றல் என்பது ஒரு பிரதிபலிப்பு செயல்முறையாகும், இதில் தனிநபர்கள் நுண்ணறிவுகளைப் பெறவும், அறிவை மேம்படுத்தவும் மற்றும் எதிர்கால செயல்களுக்கு வழிகாட்டவும் கடந்த அனுபவங்களை மதிப்பாய்வு செய்கிறார்கள்.
மேலும் பின்னோக்கல் கற்றல் என்பது உங்கள் அனுபவங்கள், செயல்கள் மற்றும் கற்றலின் மீது ஆழமாக சிந்தித்து, அவற்றிலிருந்து புத்துணர்வையும் புதிய புரிதல்களையும் உருவாக்குவதற்கான ஒரு செயல்முறை ஆகும். இது தனிநபர் கற்றலின் அளவை, தரத்தை, மற்றும் பரிணாமத்தை மேம்படுத்த உதவுகிறது.
இது ஒரே ஒரு அனுபவத்தைக் கொண்டே நிறுத்தாமல், அதனூடாக கற்றலை விருத்தி செய்து, அதனை எதிர்கால செயல்பாடுகளில் பயன்படுத்த உதவுகிறது. பிரதிபலிப்பு கற்றல் தனிநபரின் சுய விழிப்புணர்வையும், திறன்களையும் மேம்படுத்த ஒரு முக்கியமான கருவியாக விளங்குகிறது.
அறிஞர்கள் சிலர் கூறிய பின்னோக்கல் கற்றல் பற்றிய கருத்துக்கள்
ஜான் டீவி (1933): கற்றல் என்பது அனுபவங்களைப் பிரதிபலிப்பதன் மூலம் அர்த்தத்தைப் பெறுவதையும், அவற்றைக் கல்வித் தருணங்களாக மாற்றுவதையும் உள்ளடக்கியது என்று டீவி வலியுறுத்தினார். பிரதிபலிப்பு வெறும் செயல்பாட்டை மதிப்புமிக்க கற்றலாக மாற்றும் என்று அவர் நம்பினார்.
டொனால்ட் ஷான் (1983): ஷான் செயல்பாட்டின் போது சிந்திப்பது மற்றும் “செயலில் பிரதிபலிப்பு” (பின்னர் ஒரு செயல்பாட்டை மதிப்பாய்வு செய்தல்) ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். இவ் இரண்டு படிவங்களும் தனிநபர்கள் தங்கள் புரிதலைச் செம்மைப்படுத்தவும் நடைமுறைகளை மேம்படுத்தவும் உதவுகின்றன என இவர் வலியுறுத்தினார்..
டேவிட் கோல்ப் (1984): கோல்பின் அனுபவ கற்றல் கோட்பாடு, கற்றல் சுழற்சியின் ஒரு கட்டமாக பிரதிபலிப்பைச் சிறப்பித்துக் காட்டுகிறது, அங்கு கற்பவர்கள் தங்கள் அனுபவங்களை பகுப்பாய்வு செய்து எதிர்கால சூழ்நிலைகளில் அவற்றைப் பயன்படுத்துவதற்கான கருத்தாக்கங்களாக மாற்றுகிறார்கள் என கோல்ப் வலியுறுத்தினார்.
ஜெனிஃபர் மூன் (1999): இவர் ஆழ்ந்த கற்றலுக்கு பிரதிபலிப்பு முக்கியமானதாகக் கருதினார். கோட்பாட்டிற்கும் நடைமுறைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில், சிக்கலான தகவல்களைப் புரிந்துகொள்ள இது கற்பவர்களுக்கு உதவுகிறது என்று அவர் விளக்கினார்.
பவுலோ பிரேயரே (Paulo Freire):பின்னோக்கல் சிந்தனை செயலுடன் இணைக்கப்பட்டால் மட்டுமே அது அர்த்தமுள்ளதாகும் என்று வலியுறுத்தினார்.
இவர்கள் கூறிய கருத்துக்கள் பின்னோக்கல் கற்றல் ஒரு நீண்டநாள் கல்வி முறையாகவும், மாற்றங்களை உண்டாக்கும் சக்தியாகவும் செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது.
பிரதிபலிப்பு கற்றல் முறைகள்
Reflective Journaling (சிந்தனைப் பதிவேடு)
உங்கள் அனுபவங்களைப் பற்றிய குறிப்புகளை எழுதுவதன் மூலம் சிந்தனைக்கு வழிவகுக்கலாம்.
Gibbs Reflective Cycle
இதன் மூலம் நான்கு அல்லது ஆறு கட்டங்களை பயன்படுத்தி அனுபவத்தை மறுபரிசீலனை செய்து ஆராயலாம்.
Peer Review (சக பயிலல்)
மற்றவர்களின் கருத்துக்களையும் விமர்சனங்களையும் கேட்டு தன் அனுபவத்தை ஆராய்வது.
Self-assessment (சுய மதிப்பீடு)
ஒரு செயலின் பின்னர் தானாகவே என்ன கற்றுக்கொண்டேன் என்பதற்கான சிந்தனை.
Reflective Journal (சிந்தனைப் பதிவேடு) என்பது உங்கள் அனுபவங்களை ஆழமாக ஆராய்வதற்கும், அதிலிருந்து பெறும் பாடங்களை பகிர்ந்து கொள்வதற்கும் உதவும் ஒரு தனிப்பட்ட எழுதுதல் செயல்முறை.
இது கல்வி, பணிப்பயிற்சி, அல்லது தனிப்பட்ட வளர்ச்சிக்கு பயன்படும் ஒரு கருவி. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் ஆகியோருக்காக இது பயனுள்ளதாக இருக்கும்.
Reflective Journal எழுதுவதன் நோக்கம்:
- சிந்தனை மற்றும் விழிப்புணர்வு வளர்ப்பது - உங்கள் அனுபவங்களை புரிந்து கொள்வது.
- தனிநபர் மேம்பாடு - அனுபவங்களை வைத்து பயில்வது.
- செயல்திறன் மேம்பாடு - எதிர்காலத்தில் அதே சூழ்நிலைகளில் வேறுபட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு தகுந்த அனுபவம் பெறுதல்.
- அனுபவங்களை பயன்படுத்தி கற்றல் முறைகளைக் கலவையாக அமைத்தல்.
- நிகழ்வுகளின் பின்னணி மற்றும் விளைவுகளை தெளிவாகப் புரிந்துகொள்வது.
Reflective Journal எழுதுவது எப்படி?
- அனுபவத்தை வர்ணிக்கவும் - நீங்கள் எதிர்கொண்ட ஒரு நிகழ்வை எளிதாகவும் சரளமாகவும் விவரிக்கவும்.
- உங்கள் உணர்வுகளை பகிரவும் - அந்த அனுபவத்தின் போது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?
- ஆழமாக சிந்திக்கவும் - அந்த அனுபவத்தின் மூலம் என்னக் கற்றுக் கொண்டீர்கள்?
- பயிற்சி அல்லது முடிவுகளை பரிசீலிக்கவும் - இதன் மூலம் நீங்கள் எதனை மாற்றவோ அல்லது மேம்படுத்தவோ முடியும்?
உதாரணமாக, ஒரு ஆசிரியர் தனது கற்றல்-கற்பித்தல் அனுபவங்களின் பின்னர் Reflective Journal எழுதலாம்.
மாணவர்கள் எந்த வகுப்பில் ஆர்வமாக ஈடுபட்டனர்?
எந்த அணுகுமுறைகள் பொருத்தமானதாக இருந்தன?
எதிர்காலத்தில் இது எப்படி மேம்படுத்தப்படலாம்?
Gibbs Reflective Cycle (1988) என்பது ஆராய்ச்சியாளர் Graham Gibbs உருவாக்கிய ஒரு பிரபலமான சிந்தனை மாதிரி ஆகும். இது அனுபவங்களை பற்றி சிந்தித்து அவற்றிலிருந்து கற்றுக்கொள்வதற்கான கட்டமைக்கப்பட்ட முறையை வழங்குகிறது. இது குறிப்பாக கல்வி, தொழில், மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி செயல்முறைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
Gibbs Reflective Cycle - 6 கட்டங்கள்:
1.Description (விளக்கம்)
நடந்தது என்ன?
யார்/யாருடன் நடந்தது?
எந்த சூழ்நிலையில் நிகழ்ந்தது?
முக்கியமான விபரங்களை எளிமையாக விளக்கவும்.
2.Feelings (உணர்வுகள்)
நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?
சம்பவத்தின் போது பிறரின் உணர்வுகள் எப்படி இருந்தது?
உங்கள் உணர்வுகள் எதை வெளிப்படுத்துகின்றன?
3.Evaluation (மதிப்பீடு)
நிகழ்ச்சியின் நல்ல பகுதி என்ன?
எந்தவிதத்தில் அது பயனுள்ளதாக இருந்தது?
எந்தவிதத்தில் அது விரும்பத்தகாதது?
4.Analysis (ஆழ்ந்த பகுப்பாய்வு)
நிகழ்வின் அடிப்படை காரணங்கள் என்ன?
இந்த அனுபவம் ஏன் இவ்வாறு நடந்தது?
நீங்கள் செய்யாதிருந்தால் எவ்வாறு மாறியிருக்காது?
5.Conclusion (தீர்மானம்)
நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைக்கு நீங்கள் எப்படி அணுகுவீர்கள்?
6.Action Plan (நடவடிக்கை திட்டம்)
இதுபோன்ற சூழ்நிலைகள் மீண்டும் வரும்போது உங்கள் அணுகுமுறை என்ன?
நீங்கள் என்ன மாற்றங்களை செயல்படுத்துவீர்கள்?
எந்த புதிய திறன்களை கற்றுக்கொள்வீர்கள்?
பிரதிபலிப்பு கற்றலின் பயன்கள்:
சுய அறிவு வளர்ச்சிதன் திறன்களை வெளிப்படுத்துவதில் சுயநம்பிக்கை பெறுதல்.
தோல்விகளில் இருந்து கற்றல்ஒரு தவறின் மூலம் அதை மீளச் செய்யாமல் திருத்தல்.
தொடர்ந்த வளர்ச்சிஅனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு புதுமையான வழிகளை உருவாக்குதல்.
திறமையான தீர்வுகள்சிந்தனையின் மூலம் நல்ல முடிவுகளை எடுக்கலாம் .













.jpg)
.jpg)