அதிக உணர்திறன் கொண்ட ஸ்கேனருடன் பயணித்த 07 சந்தேக நபர்கள் கைது !



மன்னார் சிலாவதுறை பகுதியில் ஒரு வாடகை வாகனத்தில் அதிக உணர்திறன் கொண்ட ஸ்கேனருடன் பயணித்த 07 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக சிலாவத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்

சந்தேக நபர்கள் பயணித்த வாடகை வாகனத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சூரியவெவ, புத்தளம், கனகராயன்குளம், மன்புரி, புதுக்குடியிருப்பு, தம்போவ மற்றும் சிலாவத்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்கள்,

இவர்கள் 31 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள்.

போரின் போது புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் புதையல் மற்றும் தங்கத்தைத் தேட சந்தேக நபர்கள் ஸ்கேனரைப் பயன்படுத்தினரா என்பது குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன.