2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, 15.1% வீதமானவர்கள் தொழிலை இழந்துள்ளனர் !



கடந்த 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, 15.1% வீதமானவர்கள் தொழிலை இழந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் 60.5% வீதமான குடும்பங்களின் மாத வருமானம் குறித்த காலப்பகுதியில் குறைவடைந்துள்ளதாகவும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

2023 ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் குறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு இறுதி அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.

மேற்படி அறிக்கையின் தரவுகளுக்கு அமைவாக, குடும்பம் ஒன்றின் சராசரி மாதாந்த செலவினம் 91.1% வீதமாக அதிகரித்துள்ளதோடு, 5.3% வீதமான குடும்பங்களின் மாதாந்த செலவினத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

இலங்கையில் 22% வீதமான குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியால் கடன் நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்றும், நாட்டின் 7% வீதமான மக்கள் முறையான சுகாதாரப் பராமரிப்பை நாடவில்லை என்றும் மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.