இலங்கையின் தெற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடலில் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையில், பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு பல நாள் மீன்பிடி படகுகள் நேற்று (27) கைப்பற்றப்பட்டன.
குறித்த படகுகளில் இருந்து ஹெராயின் மற்றும் மெத்தம்பேட்டமைன் (ICE) உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையின் தகவல்களுக்கு அமைவாக, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த எடை சுமார் 450 கிலோ கிராம் ஆகும்.
இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மாத்தறை, தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என கடையினர் கூறியுள்ளனர்.
இலங்கை கடற்படையின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கையை இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் (PNB) இணைந்து மேற்கொண்டன.