ஏறாவூரில் திருடிய மாதுளம் பழங்களை ஓட்டமாவடியில் விற்றவர் கைது !


திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் வாழைச்சேனை பொலிஸாரினால் ஓட்டமாவடி பகுதியில் வைத்து புதன்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஏறாவூரில் உள்ள பழவகை கடையொன்றில் மாதுளம் பழங்களை பெட்டியுடன் சூசகமாக திருடி அதை ஓட்டமாவடியில் உள்ள பழவகை கடை ஒன்றில் விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஓட்டமாவடியைச் சேர்ந்த பழவகைக் கடை உரிமையாளருக்கு ஏற்பட்ட சந்தேகத்தில் அவர் வசமாக சிக்கியுள்ளதாவும் பின்னர்
வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் பல திருட்டுச் சம்பவத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விடுதலையானவர் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.