உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களின் பெயர்களையும் இந்த மாதம் 30ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குள் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத்தின் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஜூன் 2ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.