
விற்பனைக்கு உள்ள வாகனங்களின் விளம்பரங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு பண மோசடி செய்த குற்றச்சாட்டுக்காக ஹல்துமுல்ல பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலாங்கொடை நகரில் உள்ள ஹல்துமுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் நேற்று (மே 28) சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
இந்த சந்தேக நபர் தன்னிடம் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் விற்பனைக்கு இருப்பதாக சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டு, பின்னர் தனது வங்கிக் கணக்கில் முன்பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நிதி மோசடி தொடர்பாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் பேரில் தொடங்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபர் பலாங்கொடையைச் சேர்ந்த 29 வயதுடையவர்.
ஹல்துமுல்ல, சமனலவேவ, கேகாலை மற்றும் கண்டி போன்ற பல்வேறு பகுதிகளில் தனிநபர்களிடம் சுமார் 200,000 ரூபாய் மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேக நபர் செய்த பிற மோசடிகள் தொடர்பான தகவல்களைக் கண்டறிய ஹல்துமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.