கண்டியில் திமிங்கில வாந்தியுடன் மூவர் கைது




கண்டி மாவட்டம் வத்தேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலவின்ன பிரதேசத்தில் திமிங்கில வாந்தியுடன் (அம்பர்) மூன்று சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் கண்டி கட்டுகஸ்தோட்டை, வெலிகந்த மற்றும் கேகாலை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 43, 57 மற்றும் 63 வயதுடையவர்கள் ஆவர்.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் வத்தேகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.