ஓரிரவுக் கொள்கை வீதத்தினை இலங்கை மத்திய வங்கி மேலும் குறைக்கின்றது

நாணயக் கொள்கைச் சபையானது நேற்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் ஓரிரவு கொள்கை வீதத்தை 25 அடிப்படைப் புள்ளிகளால் 7.75 சதவீதமாகக் குறைக்கத் தீர்மானித்து.

இதன் மூலம் நாணயக் கொள்கையை மேலும் தளர்வடையச் செய்துள்ளது.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய அபிவிருத்திகளைக் கவனமாகக் கருத்திற்கொண்டதன் பின்னர் நாணயக் கொள்கைச் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது.

நாணயக் கொள்கை நிலையின் அளவிடப்பட்ட இத்தளர்த்தலானது உலகளாவிய நிச்சயமின்மைகள் மற்றும் தற்போதைய குறைவடைந்த பணவீக்க அழுத்தங்கள் என்பவற்றிற்கு மத்தியில் பணவீக்கத்தை 5 சதவீதம் கொண்ட இலக்கினை நோக்கி வழிநடாத்துவதில் ஆதரவளிக்குமென நாணயக் கொள்கைச் சபை நம்புகின்றது.