ஓய்வூதியத் திணைக்கள தரவுகள் திருட்டு - சைபர் பாதுகாப்பு கண்காணிப்பு தளம் தெரிவிப்பு !


இலங்கையின் ஓய்வூதியத் திணைக்கள தரவுகளை க்ளோக் ரான்சம்வேர் (Cloak ransomware) குழுவால் திருடப்பட்டுள்ளதாக சைபர் பாதுகாப்பு கண்காணிப்பு தளமான FalconFeeds.io தெரிவித்துள்ளது.

இந்த குழுவால் ஏதேனும் தரவு திருடப்பட்டதா அல்லது மீட்டெடுப்பதற்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை.

உள்ளக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகக் கூறப்பட்டாலும், ஓய்வூதியத் திணைக்களம் சைபர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பகிரங்கமாக எந்தவொரு அறிவிப்பும் விடுக்கவில்லை.

அண்மைய அச்சுறுத்தலைத் தொடர்ந்து அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபர் பாதுகாப்பு ஆலோசகர் அசேல வைத்தியலங்கார வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, மார்ச் மாதம் கார்கில்ஸ் வங்கியின் தரவு திருடப்பட்டமை தொடர்பில் கண்காணிப்பு தளம் (FalconFeeds.io) கண்டறிந்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.

இந்த சம்பவங்களை மேற்கொண்டதாக அடையாளம் காணப்பட்ட க்ளோக் ரான்சம்வேர் குழு, முக்கியமான தரவை குறியாக்கம் செய்வதற்கும், மறைகுறியாக்க விசைகளுக்கு மீட்கும் தொகையை கோருவதற்கும், திருடப்பட்ட தகவல்களை வெளியிடாமல் இருப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணம் பறிப்பதற்கும் பெயர் பெற்றது.

தரவு குறியாக்கம்: Ransomware பயன்பாடுகள் உங்கள் தரவை என்க்ரிப்ட் செய்து அதன் வெளியீட்டிற்கு மீட்கும் தொகையைக் கோரலாம், இது மீட்கும் தொகை செலுத்தப்படாவிட்டால் தரவு இழப்புக்கு வழிவகுக்கும்.