முதியோருக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல் !


அஸ்வெசும சலுகைகளைப் பெறும் குடும்பங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மாதாந்திர கொடுப்பனவு இன்று முதல் அவர்களின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று நலன்புரி சலுகைகள் சபை தெரிவித்துள்ளது.

இன்று முதல் பயனாளிகள் தங்கள் நிதியை அவர்களின் கணக்குகள் மூலம் அணுக முடியும் என்று சபைத் தலைவர் ஜெயந்த வீஜரத்ன தெரிவித்தார்.

நாடு முழுவதும் தகுதியடைந்த 592,766 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மொத்தம் ரூ. 2,963 மில்லியனுக்கும் (ரூ. 2,963,830,000) அதிகமாக பணம் வைப்பிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறைந்த வருமானம் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட அஸ்வெசும திட்டம், அதன் நலன்புரி கட்டமைப்பின் கீழ் ஆயிரக்கணக்கான முதிய குடிமக்களுக்கு தொடர்ந்து நிதி உதவி வழங்கி வருகிறது