.jpeg)
(சித்தா)
கல்முனை பிரதேச செயலகமும் கல்முனை சூழல் நேயன் அமைப்பினரும் இணைந்து கல்முனை பிரதேச செயலகத்தின் சுற்றாடல் தின நிகழ்வை ஒட்டி விழிப்புணர்வுக் கருத்தரங்கும், பிரதேச செயலகத்தில் உள்ள ஊழியர்கள், உயர் அதிகாரிகளுக்கான பழமரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது
அத்தோடு கல்முனை வலயத்தில் உள்ள சுற்றுலா முன்னோடி ஜனாதிபதி பதக்கத்தார மாணவிகளுக்கும், உத்தியோதர்களுக்குமான காலநிலை மாற்றமும் பிளாஸ்டிக் பாவனையாளர்களின் அதிகரிப்பும், விளைவுகளும் என்ற தொனிப்பொருளில் பிரிட்டிஷ் கவுன்சிலின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் டிசானி அவர்களினால் கலந்துரையாடலும் மேற்கொள்ளப்பட்டது இந்த நிகழ்வில் சூழல்நேயன் அமைப்பினரின் அனுசரனையோடு பழமரக்கன்றுகள் பங்குபற்றிய அனைவருக்கும் வழங்கி வைக்கப்பட்டது