ஆங்கில மொழி சமூக ஏற்றத்தாழ்வுகளை விரிவுபடுத்துவதற்கு அல்ல, வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான ஒரு கருவியாக இருக்க வேண்டும் - பிரதமர் ஹரிணி



ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்பிப்பது, சமூக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் ஒரு கருவியாக அல்லாமல், வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான ஒரு வழிமுறையாகச் செயல்பட வேண்டும் என்று பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் வரவிருக்கும் கல்வி சீர்திருத்தங்கள் மூலம் நடைமுறை ஆங்கில கற்பித்தல் அணுகுமுறைகளை செயல்படுத்தத் தயாராக உள்ளது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

கொழும்பில் பிரிட்டிஷ் கவுன்சிலால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை கல்வி மாநாடு 2025 இல் முக்கிய உரையை நிகழ்த்தும் போது பிரதமர் அமரசூரிய இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.