மெட்ரோ பேருந்து அலகொன்றை தாபிக்க அமைச்சரவை அனுமதி !


நகரப் போக்குவரத்துக்கான மெட்ரோ பேருந்து அலகொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

பொதுப் போக்குவரத்து சேவைகளை நவீனமயப்படுத்துவதற்காக இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் முன்னோடிக் கருத்திட்டமாக சொகுசான, உயர் தொழிநுட்பத்துடன் கூடிய பேருந்து வகையொன்றை அறிமுகப்படுத்துவதற்காக 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன்கீழ், மேல்மாகாணத்தில் கொழும்பு உள்ளிட்ட மாகும்புர , கடுவெல, கடவத்த மற்றும் மொரட்டுவ போன்ற பிரதான வழிகளில் இடைவழிகள் சிலவற்றின் மூலம் பயணிகள் போக்குவரத்துக்கான சொகுசான, தாழ்வான மிதிபலகை கொண்ட 100 பேருந்துகளை சேவையில் அமர்த்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.