தேசிய விஞ்ஞான மன்றம் மற்றும் கல்வி அமைச்சின் 2024/2025 ஆம் ஆண்டிற்கான விஞ்ஞான தேசிய விருது வழங்கும் நிகழ்வில் மூன்று தேசிய விருதுகளை வென்று மட்/ பட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை - களுவாஞ்சிகுடி இன்னுமொரு வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.
தேசிய விஞ்ஞான மன்றம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து இன்று (2025.11.04) கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நடாத்தப்பட்ட 2024/2025 ஆம் ஆண்டிற்கான தேசிய விருது வழங்கும் நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர், மாணவர்கள் மூன்று தேசிய விருதுகளை பெற்றுள்ளனர்.
1. விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் மாவிலையை பயன்படுத்தி வாகனப்புகையில் வெளிப்படும் நச்சு வாயுக்களின் தாக்கத்தை குறைப்பதற்கான வழிமுறை எனும் தலைப்பில் அபிட்சன், போபிலாசினி, சப்தாஞ்சனா ஆகிய மாணவர்கள் ஆய்வினை மேற்கொண்டு தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளனர்.
2. இலங்கையின் சிறந்த விஞ்ஞான கழகத்திற்கான தேசிய விருது கல்லூரியின் அதிபர் திரு.M.சபேஸ்குமார் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
3. விஞ்ஞான விருத்திக்கான இலங்கையின் சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருது பாடசாலையின் இரசாயனவியல் ஆசிரியர் செல்வராஜா தேவகுமாருக்கு 2வது தடவையாக வழங்கப்பட்டது.
இவ்விருதுகளை விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் அபேசிங்க வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இவ்விருது வழங்கல் விழாவில் இப்பாடசாலை மட்டுமே மூன்று தேசிய விருதுகளை பெற்றிருந்தமையும் பெருமைக்குரியதாகும்.












.jpeg)


.jpeg)
