டிசம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகை : நாளை நண்பகல் 12க்கு முன் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்



டிசம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகையை தபால் நிலையங்கள் மூலம் இதுவரை பெறாத முதியோர், நாளை புதன்கிழமை (31) நண்பகல் 12.00 மணிக்கு முன்பதாக குறித்த உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

மேலும், இன்றுவரை உதவித்தொகையைப் பெறாதவர்கள், 2026-01-05 அன்று மீண்டும் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என தபால்மாதிபருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.