
2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் இரண்டு பௌர்ணமி தினங்கள் வருவதால், அவற்றில் எதனை வெசாக் தினமாக அறிவிப்பது என்பது குறித்து பௌத்த மதத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைய அரச நாட்காட்டியில் மே முதலாம் திகதி வெசாக் தினமாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அன்றைய தினத்தில் அதற்குரிய நட்சத்திர பொருத்தம் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
மே 30ஆம் திகதியை அதிகாரப்பூர்வ வெசாக் தினமாக மாற்றியமைக்குமாறு மதகுருமார்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, அன்றைய தினத்தில் சகல அரச விழாக்கள் மற்றும் சமய நிகழ்வுகளையும் நடத்துவதற்குரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.







.jpeg)

.jpeg)


