இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் தகராறு ; 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி !


களுத்துறையில் பேருவளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் 7 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (5) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தன்று, இவ்வாண்டு இடம்பெறவுள்ள க .பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்காக இடம்பெற்ற விசேட வகுப்பில் கலந்துகொண்ட இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர் குழுக்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறில் 7 மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் அளுத்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .