கொழும்பு - மொரட்டுவை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட பரிசோனையில் போதைப்பொருள் பயன்படுத்திய பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் உள்ளிட்ட 8 பேர் நேற்று வியாழக்கிழமை (5) கண்டறியப்பட்டுள்ளனர்.
மொரட்டுவை பஸ் தரிப்பிடத்திலிருந்து புறப்படும் பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் பரிசோனையின் போதே இந்த 8 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதன்போது சுமார் 250 பஸ் சாரதிகளும் நடத்துனர்களும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் பயன்படுத்தியதாக கண்டறியப்பட்ட 8 பேரில் ஐவர் கஞ்சா போதைப்பொருளும், இருவர் ஹெரோயின் போதைப்பொருளும், ஒருவர் ஐஸ் போதைப்பொருளும், மற்றுமொருவர் ஐஸ், ஹெரோயின் உள்ளிட்ட இரண்டு போதைப்பொருட்களையும் பயன்படுத்தியுள்ளதாக பரிசோனையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு போதைப்பொருள் பயன்படுத்தியதாக கண்டறியப்பட்ட 8 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


.jpeg)










