இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
"இலங்கை மக்கள் தங்கள் தேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது மிகுந்த கௌரவமாகும்.
அமெரிக்காவும் இலங்கையும் சுதந்திரமான, பாதுகாப்பான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பெருங்கடலுக்கான பரஸ்பர கௌரவம் மற்றும் உறுதிப்பாட்டின் அடிப்படையில் ஒரு உறவை உருவாக்கியுள்ளன. இது பிராந்திய ஸ்திரத்தன்மையில் வொஷிங்டனின் கவனத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்றுள்ளது. நாட்டில் ஏற்பட்ட பேரனர்த்தத்தின் போது அமெரிக்கா உதவி கரம் நீட்டியது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ், எங்கள் கூட்டாண்மை வலுவாக வளர்ந்துள்ளது. இது அண்மையில் பேரழிவை ஏற்படுத்தும் தித்வா சூறாவளிக்குப் பின்னர் இலங்கை மக்களுக்கு அமெரிக்கா அளித்த ஆதரவால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ அமெரிக்கா நேரடி உதவியை வழங்கியுள்ளது. இந்த மீட்பு நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கான உயிர்காக்கும் உதவி மற்றும் அமெரிக்க நிபுணத்துவம் மற்றும் வளங்களை வழங்கியதில் அமெரிக்கா பெருமை கொள்கிறது.
எதிர்வரும் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரித்தல், தெற்காசிய மற்றும் கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பை மேம்படுத்தல், இரு நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாத்தல் என்பவற்றுக்கு நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்போம் வழங்கவோம் எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கை 1948 ஆம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி தேசிய தினம் கொண்டாடப்படுகிறது.










.webp)


.jpeg)