கடந்த வருடம் ‘GovPay’செயலி ஊடாக 45,000 சாரதிகள் போக்குவரத்து அபராதம் செலுத்தியுள்ளனர் - பொலிஸ் !


வீதி போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் செலுத்த அறிமுகப்படுத்தப்பட்ட ‘GovPay’ செயலியை பயன்படுத்தி 2025 ஆம் ஆண்டில் 40,000க்கும் மேற்பட்ட சாரதிகள் அபராத பணத்தை செலுத்தியுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, மொத்தம் 46,635 சாரதிகள் செயலி மூலம் தங்கள் அபராதங்களைச் செலுத்தியுள்ளனர்.

இதேவேளை, இவ்வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை, போக்குவரத்து விதிமீறல்களுக்கு 11,715 சாரதிகள் ‘GovPay’ செயலி ஊடாக தங்கள் அபராதங்களைச் செலுத்தியுள்ளனர்.

அதற்கமைய, அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துப் பிரிவினால் அதிகளவான அபராதத் தொகை அறிவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.