பெற்றோல் வாகனங்களுக்கு எரிபொருள் QR முறையை நடைமுறைமைப்படுத்துவது நாளை (18) முதல் மீண்டும் அமுலுக்கு வருகின்றது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதனை அறிவித்துள்ளது.
வாகன இலக்கங்களின் இறுதி இலக்கத்திற்கு அமைய, ஒற்றை, இரட்டை தினங்களின் அடிப்படையில் குறித்த நடைமுறை மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.
தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தை கருத்தில் கொண்டு, கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி முதல் இன்று (17) வரை குறித்த நடைமுறை இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது



