அக்கரைப்பற்று பகுதியில் உள்ள ஒரு கடை, கீரி சம்பா அரிசியை அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக விற்றதற்காக ரூ. 100,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) தெரிவித்துள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட அரிசி விலை விதிகளை மீறியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்தது.
ஒரு கிலோ கீரி சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 260 ஆகும். இருப்பினும், குறித்த கடையில் இரண்டு கிலோ அரிசி ரூ. 800க்கு விற்கப்பட்டுள்ளதால், ஒரு கிலோக்கு ரூ. 400 என கணக்கிடப்படுகிறது. இது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ஒரு கிலோக்கு ரூ. 140 அதிகமாகும்.
அம்பாறை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபை அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் இந்த மோசடி கண்டறியப்பட்டதுடன், பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடை உரிமையாளர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி அரிசி விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என CAA தெரிவித்துள்ளது.
மேலும், பொருட்களை வாங்கும் போது அதிகபட்ச சில்லறை விலையை சரிபார்க்கவும், இதுபோன்ற சம்பவங்களை ரசீதுகளுடன் 1977 என்ற CAA உதவி இலக்கத்திற்கு தகவல் தரவும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபை அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் இந்த மோசடி கண்டறியப்பட்டதுடன், பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடை உரிமையாளர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி அரிசி விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என CAA தெரிவித்துள்ளது.
மேலும், பொருட்களை வாங்கும் போது அதிகபட்ச சில்லறை விலையை சரிபார்க்கவும், இதுபோன்ற சம்பவங்களை ரசீதுகளுடன் 1977 என்ற CAA உதவி இலக்கத்திற்கு தகவல் தரவும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.













.jpg)