இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
சிறுவர்களின் கைத்தொலைபேசி பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது மற்றும் சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் தற்போது தீவிரமாக கலந்து ஆலோசித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் சூழலில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கொள்கைப் பரிந்துரைகளை உருவாக்குவதற்காக, பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் விசேட ஆலோசனைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
05 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைத்தொலைபேசி மற்றும் டேப்லெட் போன்ற டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்துவதை முழுமையாகத் தடை செய்தல், 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகப் பயன்பாடுகளை முற்றாகத் தடை செய்தல் ஆகியவை பரிசீலனையில் உள்ள முன்மொழிவுகளில் அடங்குகின்றன.












.jpg)
