இதன் ஒரு பகுதியாக, யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் பாதுகாப்பு நிலைமையை ஆராயும் நோக்கில் இராணுவம், பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து அவசர ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்தினர்.
அண்மையில் நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் மோதல் மற்றும் அமைதியின்மை சம்பவங்கள் பதிவாகியுள்ளதையடுத்து, அவற்றின் தாக்கம் ஏனைய சிறைச்சாலைகளிலும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக, யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் பாதுகாப்பை வலுப்படுத்துவது, கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மற்றும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுப்பது தொடர்பில் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், நிலைமையை பாதுகாப்புத் தரப்பினர் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




