ஊறணி, கனகர் கிராமத்தில் 250க்கு மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 45 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றன.
இக்குடியிருப்பு பிரதேசத்தில் கொழும்பை சேர்ந்த சிங்களவர் ஓருவர் தனக்கு இப்பகுதியில் 59 ஏக்கர் நிலப்பரப்புக்கான ஆவணம் உள்ளது எனக் கூறி நிலஅளவை செய்வதற்கு பொத்துவிலுக்கு ஆளும் கட்சியைச் சேர்ந்த சிங்கள அரசியல்வாதி ஒருவரின் ஒத்துழைப்புடன் வந்துள்ளதாக பிரதேச மக்களுக்கு தெரியவந்ததையடுத்து மக்கள் மத்தியில் பதற்றமான நிலை ஏற்பட்டது
கடந்த 1965ஆம் ஆண்டு மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தின் பெயரில் கனகர் கிரமம் உருவாக்கப்பட்டு காணி ஆவணங்கள் வழங்கப்பட்டு குடியேற்றப்பட்டனர்.
இக்கிராமத்தின் தமிழர் குடியிருப்பு நிலங்களை அபகரித்து உல்லாச விடுதிகள் கட்டுவதற்காக அரசியல்வாதிகளின் ஒத்தாசையுடன் அடிக்கடி இப்பிரதேச மக்களை அச்சுறுத்தி வருவதாக அங்குள்ள மக்கள் குற்றம் சுமத்துவதாக அவர் தெரிவித்தார்.






.jpg)





