மட்டக்களப்பு - நீர் தாங்கியிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு திருமலை வீதியில் உள்ள சென் செபஸ்தியார் வயோதிப இல்லத்தில் கடமைபுரியும் இளைஞனின் சடலம் நீர் தாங்கியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
அங்கு கடமைபரியும் பாலமீன்மடுவைச் சேர்ந்த ஜெயசீலன் இமானுவல் டினேஸ்குமார் ( 28 வயது) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நீர் தாங்கி நீர் பம்பியில் மின்னிணைப்பில் ஏற்பட்ட கோளாரினை திருத்துவதற்காக பிற்பகல் 3.00மணியளவில் நீர்த்தாங்கியில் ஏறிய இளைஞனை காணவில்லை என்பதால் தேடிய இல்ல நிருவாகம் நீர் தாங்கியில் ஏறிப் பார்த்த போது தாங்கியினுள் வீழ்ந்து இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு காவல்நிலையத்திற்கு இல்ல நிருவாகம் தகவல் வழங்கியதனை அடுத்து காவல்துறையினர் இளைஞனின் பிரேதத்தை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்