செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 11வது ஆண்டு நிறைவு வைபவம்

செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 11வது ஆண்டு நிறைவு வைபவம் மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் (17.9.2011) நேற்று நடைபெற்றது.

இந்நிறுவனத்தின் போசகரும் காத்தான்குடி பிரதேச செயலக கணக்காளருமான எம்.ரெஜினோல்ட் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் பிரதி மேயர் ஏ.ஜோர்ஜ் பிள்ளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி கலாமதி பத்மராசா, மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே.றமழான் உட்பட முக்கியஸ்த்தர்கள், அதன் அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது இந்நிறுவன அங்கத்தவர்களின் ஒன்று கூடல் இடம்பெற்றதுடன் இவர்களின் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.