திருகோணமலை - கந்தளாய் - கித்துலுஉதுவ பகுதியில் பாலம் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியானதோடு மேலும் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கித்துலுஉதுவ பாலத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தில் இன்று (18) அதிகாலை வான் ஒன்று மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் வானில் பயணித்த இருவர் உயிரிழந்ததோடு காயமடைந்த 9 பேர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
--