மட்டக்களப்பை சேர்ந்த இளம் யுவதி வெள்ளவத்தையில் தனக்குத்தானே தீமூட்டி தற்கொலை

லண்டனில் சட்ட முதுமாணிப் பட்டப்படிப்பை  பூர்த்தி செய்துவிட்டு இலங்கை
திரும்பிய 24  வயதுடைய யுவதியொருவர் தனக்குத்தானே தீமூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அண்மையில் கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது .
இது குறித்து தெரியவருவதாவது ..

கொழும்பிலுள்ள  பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயின்ற குறித்த யுவதி சில வருடங்களுக்கு முன்னர் லண்டனில் சட்ட முதுமாணிப் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக  சென்றுள்ளார் . லண்டனிலிருந்து திரும்பி சில வாரங்களே ஆனா நிலையில் இந்த யுவதி திடிரென வீட்டில் தனக்குத்தானே தீமூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார் .


இந்த யுவதி மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவரை காதலித்த தாகவும் அதான் பின்னரே  இவர் லண்டன சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .

கடும் தீக்காயங்களுடன் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்த யுவதி சில தினங்களுக்குப் பின்னர் உயிரிழந்துள்ளார் .