ஏறாவூர்-ஐயங்கேணிப் பிரதேசத்தில் நடைபெற்ற வறியகுடும்பங்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டுத்திட்டத்தின் அங்குரார்ப்பணநிகழ்வு

(சித்தாண்டி நித்தி) பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சிக்கான அபிவிருத்தி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டுத்திட்டத்தின் அங்குரார்ப்பணநிகழ்வு ஏறாவூர்- ஐயங்கேணிப் பிரதேசத்தில் 24.04.2014 நடைபெறற்து. கிழக்கு மாகாண சபையின் பிரதிதவிசாளர் எம்எஸ் சுபைர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் பிரதிப்பணிப்பாளர் எஸ்எம் ரணவீர உதவிச் செயலாளர் எம்வைஎம் யூசுப் பனை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் தேவநாதன் மற்றும் ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் எஸ்எல்எம் ஹனிபா ஆகியோரும் கலந்துகொண்டனர்.