பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதியுடைய மாணவர்களிடமிருந்து தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


2013/ 2014 கல்வியாண்டுக்கு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.


இதன்படி  2013 க.பொ.த.உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றின் பிரகாரம் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதியுடைய மாணவர்களிடமிருந்தே  தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


இந்த விண்ணப்பங்களை எதிர்வரும் மே 19 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. 

விண்ணப்பப் படிவங்கள் அடங்கிய தகவல் கையேடுகளை சகல மாவட்டங்களிலுமுள்ள பிரதான புத்தக நிலையங்களில்  500 ரூபாவைச் செலுத்தி பெற்றுக் கொள்ள முடியுமென மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இதேவேளை விண்ணப்பப் படிவங்கள் அடங்கிய தகவல் கையேடுகளை தபால் மூலம் பெற்றுக் கொள்வதாயின் இலங்கை வங்கியில் ப.மா. ஆ. திரட்டு கணக்கு இலக்கமான  0002323287 இல் அல்லது மக்கள் வங்கியில்  167-1001-4-3169407 என்ற கணக்கில்  500 ரூபாவை வைப்பிலிட்டு அதன் ரசீதுடன் பெயர், பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூலைப் பெற விரும்பும் மொழி ஆகியவற்றை குறிப்பிட்டு ஒரு கடிதம் மூலம் மேலதிக செயலாளர் (கல்வி அலுவல்கள் மற்றும் பல்கலைக்கழக  அனுமதிகள்), பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, இல. 20, வாட் பிளேஸ், கொழும்பு  07 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்பதுடன் அதனுடன் முத்திரை ஒட்டப்பட்ட  35 செ. மீ. X 24 செ.மீ. அளவுக்கு குறையாத கடித உறையொன்றில் சுயமுகவரியிட்டு அனுப்ப வேண்டும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.