அன்னையர் தினத்தையொட்டி சிறுவர்களால் அன்னையர்கள் கௌரவிப்பு

(சிவம்)

சிறுவர்களிடத்தில் தாய்மார்களைக் கௌரவிக்கும் மனப்பான்மையை வளர்க்கும் நோக்ககோடு அன்னையர்களைக் கௌரவிக்கும் நிகழ்வுகள் கல்லடிக் கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) மாலை இடம்பெற்றன.

குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தின் பொறுப்பாளரின் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு தாண்டவன்வெளியில்  அமைந்துள்ள   FUTURE MINDS KINDER GARDEN & CHILD CARE பராமரிப்பு நிலையத்தின் சிறுவர்கள் அன்னையர்களிடம் பரஸ்பரம்  அன்பைப் பரிமாறிக் கொண்டதுடன் அன்னையர்களுக்கான பூச்செண்டும் மற்றும்  அன்னையைப் பற்றிய அன்பை வெளிப்படுத்தும் வாசகங்கள் பொறித்த வாழ்த்து மடல்களும் ஒவ்வோரு சிறுவர்களினால் தங்களது அன்னையர்களுக்கு வழங்கப்பட்டன.

இதன்போது தாய்மாருக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றோர்களுக்கு நிர்வாக இயக்குனர் குவேதா மனோகரனால் மாலைகள் அணிவிக்கப்ட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கணவன்மார்களினால்; மனைவிமார்களுக்கு அன்னையர் தின நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.