(கிருதஞ்ஞன்)
'நாளைய உலகை வெற்றிகொள்ள அறிவு ஞானத்தை வளர்ப்போம்' எனும் தொனிப் பொருளில் 'தாருண்யட்ட ஹெடக்' அமைப்பின் தலைவரும் அம்பாந்தோட்டைப் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அவர்களின் அனுசரணையுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான முன்னோடிக் கருத்தரங்குகள் நாட்டின் சகல வலயங்களிலும் நடைபெற்று வருகின்றது.
இந்த வகையில் இன்று (25.07.2014) பட்டிருப்பு கல்வி வலயத்தில் 3 நிலையங்களில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்றது.
இச் செயலமர்வின் சம்பிரதாயபூர்வமான நிகழ்வு மட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. 'தாருண்யட்ட ஹெடக்' அமைப்பின் திட்ட இணைப்பாளர் திரு.பிரதீப், பட்டிருப்பு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன், முன்பள்ளி இணைப்பாளர் திரு.ந.புவனசுந்தரம் ஆகியோர் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.
'நாளைய உலகை வெற்றிகொள்ள அறிவு ஞானத்தை வளர்ப்போம்' எனும் தொனிப் பொருளில் 'தாருண்யட்ட ஹெடக்' அமைப்பின் தலைவரும் அம்பாந்தோட்டைப் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அவர்களின் அனுசரணையுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான முன்னோடிக் கருத்தரங்குகள் நாட்டின் சகல வலயங்களிலும் நடைபெற்று வருகின்றது.
இந்த வகையில் இன்று (25.07.2014) பட்டிருப்பு கல்வி வலயத்தில் 3 நிலையங்களில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்றது.
இச் செயலமர்வின் சம்பிரதாயபூர்வமான நிகழ்வு மட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. 'தாருண்யட்ட ஹெடக்' அமைப்பின் திட்ட இணைப்பாளர் திரு.பிரதீப், பட்டிருப்பு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன், முன்பள்ளி இணைப்பாளர் திரு.ந.புவனசுந்தரம் ஆகியோர் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.