அனர்த்த ஒத்திகை நிகழ்வு



(சக்தி)

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு ஐரோப்பிய ஆணைக்குழுவின் நிதியுதவியின் கீழ் அக்ரெட், எனும் அரச சார்பற்ற அமைப்புடனும், போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துடனும் இணைந்து நடாத்திய அனர்த்த ஒத்திகை நிகழ்வு போரதீவுப்பற்று பிரதேசத்தின் மாலையர்கட்டு எனும் கிராமத்தில் இடம்பெற்றது.

மாலையர்கட்டு கிரம சேவகர் க.குகதாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவியாளர் த.துஷ்யந்தன், அக்ரெட் நிறுவனத்தின் மாவட்ட திட்ட உத்தியோகஸ்தர் இ.கஜேந்திரன், வெல்லாவெளிப் பிரதேச இராணுவத்தினர், மற்றும் கிராம பொதுமக்கள்  என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அனர்த்தம் ஒன்று ஏற்படும் வேளையில் மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக வெளியேறுதல், தேடுதல்களை எவ்வாறு மேற்கொள்ளுதல், முகாம்களை எவ்வாறு பராமரித்தல், சுகாதர முதலுதவி செயற்பாடுகளை எவ்வாறு நடைமுறைப் படுத்தல் மற்றும் நிவாரண சேவைகளை மேற்கொள்வது தொடர்பாக இதன்போது ஒத்திகை பார்க்கப்பட்டன.