மட்டக்களப்பு காலையடிக்குளம் ஸ்ரீ வீரபத்திரகாளி அம்மன் ஆலய பாற்குடபவணி

மட்டக்களப்பு வவுணதீவு மண்டபத்தடி காலையடிக்குளம் ஸ்ரீ வீரபத்திரகாளி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக பாற்குடபவணி நிகழ்வு இடம்பெற்றது.


இதன்போது வவுணதீவு மண்டபத்தடி ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இருந்து பாற்குடபவணி நிகழ்வு ஆரம்பமாகி ஆலயத்தை வந்தடைந்தது.

இதன் போது பெருந்திரளான பெண்கள் தலையில் பாற்குடம் ஏந்திச் சென்றனர். இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கலந்து கொண்டார்.