மண்டூர் 40 அ.த.க. பாடசாலையில் இடம்பெற்ற சேவைநலன் பாராட்டு விழா.

(பழுவூரான்)
மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தில் சேவையாற்றி ஓய்வுபெறப் போகும் மூன்று அதிகாரிகளுக்கு சேவைநலன் பாராட்டு விழா மட்/மண்டூர் 40 அ.த.க.பாடசாலையில் அதிபர் க.பகீரதன் தலைமையில் இடம்பெற்றது.
பிரதிக்கல்விப்பணிப்பாளர் (திட்டமிடல்) தா.நித்தியானந்தம் அவர்களும், உதவிக்கல்விப்பணிப்பாளர்(தமிழ்)  ச.நாகராஜா அவர்களும் மற்றும் பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் ஆகிய மூவரும் இவ்வருடத்துடன் கல்வி நிருவாகச்சேவையில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்கள். இதனை சேவையில் இருக்கும் போதே  கௌரவிக்கும் முகமாக நேற்று(31) சேவைநலன்  பாராட்டுவிழா இடம்பெற்றது.

இதில் கோட்டக்கல்விப்பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன் அவர்களும். உதவிக்கல்விப்பணிப்பாளர், நாடகமும் அரங்கியலும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகரும், பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

இதன் போது கலைச்சுடர் கோவிலூர் க.தணிகாசலம் மற்றும் அண்ணாவியார் க.பாக்கியராஜா அவர்களின் நெறியாள்கையின் கீழ் "கர்ணன்போர்" எனும் நாட்டுக்கூத்து அரங்கேற்றப்பட்டது.

ஆலய நிருவாக சபையினால் பாடசாலைக்கு ஒலிபெருக்கி சாதனங்களும் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.