கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் படுகாயம்

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் பெரிய முகத்துவாரத்தில் நேற்று (29) இடம்பெற்ற கார் விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் படுகாயம் அடைந்துள்ளதாக திருக்கோவில் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி விபத்தில் இரண்டு பெண்கள், இரண்டு சிறுவர்கள் இரண்டு ஆண்கள் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில்,  பொலிஸார், இராணுவம், பொது மக்களின் உதவியுடன் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு அவரசப் பிரிவில் சிகிச்சைகள் மேற் கொள்ளப்பட்டன.

இதனை அடுத்து ஒரு வயோதிப பெண் மற்றும் 7 வயது சிறுவன் உட்பட மூன்று பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக, அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக, திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலை வைத்தியர் எம். தமிழ்தாசன் தெரிவித்துள்ளர்.


இவ் விபத்து தொடர்பாக தெரியவருவதாவது,

உகந்தை குடும்பிமலை விகாரைக்குச்  சென்று இரண்டு நாட்களாக மத வழிபாட்டில் கலந்து கொண்ட குறித்த குடும்பத்தினர், தங்களது கிராமமான அம்பாறை தமண பிரதேசத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

தம்பிலுவில் பெரிய முகத்துவார வளைவில் அமைந்துள்ள தூண் ஒன்றுடன் கார் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி விபத்து சம்மந்தமான விசாரனைகளை திருக்கோவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.<