மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயம்

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை (18) இடம்பெற்ற வாகன விபத்தில், நால்வர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பிலிருந்து அக்கறைப்பற்று நேக்கிச் சென்று கொண்டிருந்த பொத்துவில் டிப்போவுக்குச் சொந்தமான பஸ்வண்டியும் மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிக்குடிக்கு சென்று கொண்டிருந்த   பிக்கப் ரக வாகனமும் மோதியதினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.


இதன்போது பஸ்வண்டியில் பயணித்த ஒருவரும், பிக்கப் வாகனத்தில் பயணித்த சாரதி ,  நீர்ப்பாசனப் பொறியியலாளர்  உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

தற்போது மேலதிக சிகிச்சைகளுக்காக ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்