ஆவணி சதுர்த்தியில் உலங்கு வானூர்தியில் மலர்கள் சொரிய பெரியபோரதீவு முத்து விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

(சிவம் , எம்.ஏ.றமீஸ்)

பிள்ளையாருக்கு மிகவும் உகந்த ஆவணி சதுர்த்தி தினமான இன்று பெரியபோரதீவு முத்து விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான சிவனேசதுரை சந்நிரகாந்தன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு விடுத்த வேண்டுகோளிற்கிணங்க விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் கும்பாபிசேகத்தின் போது மலர்கள் சொரியப்பட்டன.

ஆலய பிரதம குரு வை. இ. எஸ். காந்தன் குருக்கள் தலைமையில் கும்பாபிஷேகம் இடம்பெறுவதையும் சிவனேசதுரை சந்நிரகாந்தன் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் மற்றும் சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் கே.துரைநாயகம்  உட்பட பலர் கலந்து கொண்டனர்..


(வீடியோ - விஜயநாதன் )