வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் ஆலய கொடியேற்றம்

(த.லோகதக்சன்)

வாழைச்சேனைப் பிரதேசத்தில் நூறு வருடங்களுக்கு மேற்பட்ட ஆலயமாக வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான உற்சவம் பத்து நாட்கள் திருவிழாவான இடம்பெற்று 29ம் திகதி வெள்ளிக்கிழமை தீர்த்த உற்சவத்துடன் நிறைவடையும்.


எதிர்வரும் 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாம்பழத் திருவிழா, 27ம் திகதி புதன்கிழமை வேட்டைத் திருவிழா, வியாழக்கிழமை தேரோட்டத் திருவிழா, இறுதி நாள் 29ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு வங்கத்தின் கரை பாசிக்குடா கடற்கரையில் புண்ணிய தீர்த்தோற்சவம் இடம்பெறும்.

வசந்த மண்டப பூசையை தொடர்ந்து கொடியேற்றப் பூசைகள் நடைபெற்றது.

கொடியேற்ற பூசை யாழ்ப்பாணம் சாம்பாவெளி வீரகத்தி விநாயகர் தேவஸ்தான பிரதம குரு வேதாகம உதயசூரியன் சிவஸ்ரீ.ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் நடைபெற்றது.