மட்டக்களப்பு வாவியினுள் பாய்ந்தது முச்சக்கரவண்டி மூவர் மயிரிழையில் உயிர் தப்பினர்


(சிவம்)
மட்டக்களப்பு புதுப்பாலத்தில் ஓட்டோ ஒன்று பாதையை விட்டு விலகி ஆற்றிலுள் பாய்ந்ததினால்; அதில் பயணம் செய்த மூன்று பேர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் இன்று இடம்பெற்றதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.


ஓட்டோவின் சாரதி மட்டக்களப்பை சேர்ந்த ரபாயல் வின்சன் (60) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிட்சைப் பிரிவிலும்,
அதில் பிரையாணம் செய்த நிந்தவூரைச் சேர்ந்த ஏ.எம். காசிம் மற்றும் எஸ். சுஜீதா ஆரம்ப சிகிட்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை பெற்று வருகின்றனர்.


மட்டக்களப்பு பொலிசார் மற்றும் மீனவர்களின் உதவியுடன் அனர்த்தத்திற்குள்ளானவர்களும் ஓட்டோவும் மீட்கப்பட்டன.

மட்டக்களப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.