அம்பாறை மாவட்டதில் இரு தினங்களுக்கு மின்வெட்டு

அவசர திருத்த வேலை காரணமாக  சனிக்கிழமை (30) முதல் ஞாயிற்றுக்கிழமை (31) வரை அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பிராந்திய மின் பொறியிளாலர் தெரிவித்தார்.

அம்பாறை, இறக்காமம், பொத்துவில், அக்கரைப்பற்று, திருக்கோவில், அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், அஷ்ரப் நகர், அட்டப்பளம், நிந்தவூர், காரைதீவு, சம்மாந்துறை, மருதமுனை, கல்முனை, நட்பிட்டினை, உகண, தமண, ஆகிய பிரதேசங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 07.30 மணி தொடக்கம் மாலை 05.00 மணி வரை இம் மின் தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.