சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற 7ம் நாள் பட்டியன்குடித் திருவிழா

(நித்தி) சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நான்காம் (7ம்) நாள் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை பட்டியன்குடியனரால் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றன. 

நடைபெற்ற பட்டியன்குடித் திருவிழாவின்போது காலையில் விநாயகப்பெருமானுக்கு விசேடபூசை, அபிசேகத்துடன் ஆரம்பமாகி அதனைத்தெடர்ந்து முருகப்பெருமானுக்கு அபிசேகமும் பின்னர் தம்ப விசேட அபிசேகப்பூசை நண்பகல் வசந்த மண்டபப்பூசை நடைபெற்றுமுடிந்த பின்பு  சுவாமி உள்வீதி வலம்வந்து பகல் பூசைகள் அனைத்தும் நிறைவடைந்தன. நடைபெற்ற இரவு பூசையில் தம்ப பூசை மற்றும் வசந்தமண்டப பூசை நிறைவடைந்து உள்வீதி வலம்வந்ததும் யாகசாலை பூசை நிறைவடைந்து அலங்கரிக்கபட்ட வாகனத்தில் முருகப்பெருமான் ஆலயத்திலிருந்து 7ம் நாளாக வெளிவீதி வந்து மக்களுக்கு காட்சிகொடுத்தார். 

நடைபெற்ற பட்டியன்;குடியினரின் பகல், இரவு உற்சவகால பூசைகளை திருவிழா ஆலய பிரதம குரு ஈசான சிவாச்சாரிய திலகம் சிவஸ்ரீ.எம்.கே.குகன் குருக்கள் மற்றும் மகோற்சவ பிரதம குரு கலாநிதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றன.